search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டி ஏரி"

    • இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது.
    • பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று அது 1684 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் பூண்டி மற்றும் ஆந்திரா பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

    காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

    இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான் சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான் 3645 மி.கனஅடியில் 2860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2237 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    • பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் நேற்று ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மற்றும் ஆந்திரா பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நேற்று 1520 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி ஆகும். இதில் 2823 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 630 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. உபரி நீர் திறப்பும் 1684 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பூண்டி ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 3.5 டி.எம்.சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளது. கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து உபரி நீராக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரி நிரம்பி உள்ளதால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2799 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 20.78 அடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரிக்கு 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2217 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மொத்த உயரமான 21 அடியில் 15.98 அடிக்கு தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு 93 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் மொத்த கொள்ளவான 1081 மி.கனஅடியில் 165 கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    • பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
    • கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தின் மேற்கு பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் திருத்தணியில் 13 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சராசரியாக 500 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு 1520 கனஅடியாக உயர்ந்தது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 34 அடியாக உயர்ந்து உள்ளது. ஏரியில் மொத்தம் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரியில் 2792 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 35 அடியை எட்டிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.

    எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை.
    • தற்போது பூண்டி ஏரியில் 2624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 1944-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன. ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்த பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடம்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கடந்த மே 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ம் தேதி பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது வரை பூண்டி ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. கிருஷ்ணா தண்ணீருடன் மழை நீரும் வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று பூண்டி ஏரிக்கு 630 கனஅடிவரை தண்ணீர் வந்தது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் தற்போது அதன் முழு கொள்ளளவில் 81 சதவீதம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2624 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. அதன் மொத்த உயரமான 35 அடியில் 33.35 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து லிங்க் கால்வாய் மூலம் 380 கனஅடிவீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரி கட்டப்பட்டதில் இருந்து இதுவரை அதன் ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பூண்டியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகின்றது இந்த ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது பூண்டி ஏரியில் 2624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

    தற்போது 1,2,4,5,6,14,15 ஆகிய ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷட்டர்களில் இருந்து அதிகளவு நீர்க்கசிவு ஏற்பட்டு உபரிநீராக செல்கின்றன. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொதுப்பணித்துறையினர் உடனடியாக பூண்டி ஏரியின் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்கை மாற்றி சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களுக்கு முக்கியமானது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கல்குவாரி தண்ணீர், விவசாய கிணறு மற்றும் ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. எனவே தற்போது ஏரியில் உள்ள தண்ணீரை உரிய முறையில் பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டும். ஏரியின் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். இல்லை எனில் இதுவே மதகுகளுக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்றார்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது கூறியதாவது:-

    பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் நீர்க்கசிவை ஊழியர்கள் தினமும் சரி செய்து வருகின்றனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஷட்டர்களில் அதே இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நீர்க்கசிவுக்கு நிரந்தர தீர்வுக்காக மதிப்பீடு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும்.

    அதற்கான நிதி வந்தவுடன் ஷட்டர் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். பூண்டி ஏரியில் நீர் முழுவதும் வடிந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும். தற்போது அப்பணிகளை மேற்கொண்டால் தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியே சென்று விடும் என்றார்.

    • கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீர் தேவைக்காக தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவடட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தற்போது பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1030 கனஅடியாக இருந்தது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லி யன் கனஅடி. இதில் 2586 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    ஏரிக்கு மழைநீர் 650 கனஅடியும், கிருஷ்ணா தண்ணீர் வரத்து 380 கன அடியாகவும் இருந்தது. 480 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 300 கனஅடி அனுப்பப்படுகிறது.

    • கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
    • மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி சுகந்தி(வயது39). இவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    சாமி தரிசனம் முடிந்ததும் அனைவரும் பூண்டி ஏரிக்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.

    ஆழமான பகுதிக்கு சென்ற சுகந்தி தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டனர். மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது.
    • கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக ஆவடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    ஜமீன்கொரட்டூர்-74

    செங்குன்றம்-34

    கும்மிடிப்பூண்டி-5

    பள்ளிப்பட்டு-20

    ஆர்.கே.பேட்டை-54

    சோழவரம்-28

    பொன்னேரி-16

    பூந்தமல்லி-23

    திருவாலங்காடு-26

    திருத்தணி-32

    தாமரைப்பாக்கம்-23

    திருவள்ளூர்-54

    ஊத்துக்கோட்டை-3.

    கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு அதிகபட்சமாக 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு3300 மி.கனஅடி. இதில் 1866 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு3645மி.கனஅடி. இதில் 2688 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 429 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 128 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி எரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2337 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • சென்னை குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 6,816 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2,623 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை குடிநீர் தேவைக்காக 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1803மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் 130 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 110மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 1936மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 258கனஅடி தண்ணீர் வருகிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி எரிக்கு ஏற்கனவே கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் விட்டு விட்டு நீடித்த மழை இரவு பலத்த மழையாக பெய்தது.

    விடிய விடிய கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 2698 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 1700 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 70 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 1955 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 190 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 189 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு பஸ் நிலையம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    • பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் அடுத்த பூண்டியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை அகற்றி 1944ல் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டி திறக்கப்பட்டது.

    இந்த நீர்த்தேக்க பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், பல்வேறு அணைக்கட்டு மாதிரிகள் இடம் பெற்ற நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மையம் ஆகியவையும் இங்குள்ளன.

    மேலும் நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு பூண்டி பஸ் நிலையம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த அணையில் நீர்வற்றும்போது பழமையான ஊன்றீஸ்வரர் கோவிலைக் காணலாம்.

    இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குவதால், நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து குழந்தைகள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. பரப்பளவு 121 சதுர கி.மீ ஆகும்.

    பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொசஸ்தலை ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது.

    மேலும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால் பேபி கால்வாய் மற்றும் பிரதான இணைப்பு கால்வாய் மூலம் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

    இங்குள்ள பூங்காவில் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை இருந்தன. எனினும் இப்பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

    அதனால் இனி வருங்காலத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்த பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.

    இதுபோன்று செய்வதன் மூலம் வருங்காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்காக இப்பகுதியைத் தோண்டியபோது கிடைத்த பழங்காலப் பொருள்களைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம். இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த அருங்காட்சியகத்தில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழி போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பூண்டிக்கு அருகிலுள்ள கொசஸ்தலை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியிலும் அதையடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

    இதைக் கருத்தில்கொண்டு பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் வகையில் தொல் பழங்கால அகழ்வைப்பகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அகழ்வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள் நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய ஈமப்பேழை கல்மரம், நிலவியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரிக்கரை மீது சேதமடைந்த பூங்காவை தரம் உயர்த்தும் வகையிலும், சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்கள், டைனோசர், செல்பி பாயிண்ட், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும் ரூ.80 லட்சம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்த்தேக்க வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் சத்தியமூர்த்தி திருவுருவச்சிலையுடன் அறிவியல் பூங்கா சிறுவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்தது.

    இங்கு சிறுவர்கள் பொழுது போக்கும் வகையில் அறிவியல் உபகரணங்கள், குடை ராட்டினம், ஏற்ற இறக்கம் மற்றும் சம விளையாட்டு, குதிரை சவாரி ராட்டினம், ஊஞ்சல் விளையாட்டு, பூங்கா நீருற்று, இருக்கைகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்தது.

    அதனால் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் இருந்தது. ஆனால், திறந்த வெளியில் இருந்ததால், போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புகலிடமாகவே மாறியது. அதோடு, கால்நடைகளும் புகுந்து விடுவதால் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகள் சேதமடைந்தது.

    இந்த நிலையில் பூங்காவை சீரமைத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு அறிவியல் பூங்காவை நவீன முறையில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.80 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற் கொண்டனர். ஆனால் இதுவரை அறிவியல் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    தற்போது இந்த அறிவியல் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சேதமடைந்த நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சீரமைக்கப்படும். அதேபோல், நவீன முறையில் குழந்தைகள் அறிவுபூர்வமாக கற்றதை நேரடியாக செயல் விளக்கம் மூலம் பெறும் நியூட்டன் இயக்க விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் டைனோசர், பூங்காவிற்கு வந்து செல்வோர் நினைவாக சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி பாயின்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் பூண்டி நீர்த் தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான பணிகளை மேம்படுத்தினால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழையாக நீடிக்கிறது.
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    திருவள்ளூர்:

    வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப்பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழையாக நீடிக்கிறது. நேற்று மதியம் கனமழையாக சில இடங்களில் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. ஏற்கனவே மழைநீர் கால்வாய், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கின. குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் விட்டு விட்டு கன மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் பலத்த மழை கொட்டுவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 2137மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு146 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 192 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 2375மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 302 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 163 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் தற்போது 2075 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழை நீர் சேர்ந்து 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 405 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 370மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    திருவள்ளூரில் அதிகபட்சமாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போல் ஊத்துக்கோட்டையில் 13 மி.மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 10 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது.

    • கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கடந்த 2 மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் தற்போது 2082 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2235 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 89 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2347 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன. அடியில் 377 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் மொத்தம் 7130 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த தண்ணீர் இருப்பில் 60 சதவீதம் ஆகும்.

    ×